புதுச்சேரி:
புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்க புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக அறிவிப்பை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தடுப்பூசி திருவிழாவை மேலும் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுவதாகவும், தடுப்பூசி திருவிழா நடைபெறும் 6 நாள்களில் தினந்தோறும் 25 பேருக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.