பிஸியான நடிகராக இருக்கும் ஷாரூக்கான், பட தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.

இப்போது அவர் அபிஷேக்பச்சன் நடிக்கும் படம் ஒன்றையும், பாபி தியோல் நடிக்கும் படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் மூன்றாவதாக இன்னொரு படத்தையும் தயாரிக்கிறார்.

தாய் – மகள் பாசத்தை அடிப்படையாக கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

அம்மாவாக ஷெபாலி ஷா நடிக்க மகள் வேடத்தில் அலியா பட் நடிக்கிறார்.

ஜெஸ்மீத் கேரீன் டைரக்டு செய்கிறார்.

மும்பையை களமாக கொண்டு ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த தாயும் மகளும் ஒரு இக்கட்டான பிரச்சினையில் சிக்கி கொள்கிறார்கள்.

அதில் இருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பது. கதை.
விரைவில், இதன் ஷுட்டிங் ஆரம்பம் ஆகிறது.

-பா. பாரதி