ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் செயல்பட்டு வரும், அரசு உதவிபெறும் பள்ளியான பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஹபீப் என்பவர், மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்ததாக எழுந்த புகாரில், அவரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சமீப நாட்களாக தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது ஏற்னவே பத்மா சேஷாத்திரி, மகிரிஷி, செயினிட் ஜார்ஜ் பள்ளி, சுசில்ஹரி பள்ளி உள்பட பல பள்ளிகளின் ஆசிரியர்கள் மீது புகர்கள் வந்த நிலையில், தற்போது, முதுகுளத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஹபீப்  பள்ளி மாணவிகளை வீட்டுக்கு வரச்சொல்லி மிரட்டியதாக ஆடியோ வைரலானது . இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியரை சஸ்பெண்டு செய்துள்ளது. அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி வாசல் பள்ளிக்கூட அறிவியல் ஆசிரியர் ஹபீப்,  ஆன் லைன் வகுப்பிற்காக பெற்ற செல்போன் நம்பரில் 20க்கும் மேற்பட்ட மாணவி களை தொடர்பு கொண்டு தனிமையில் வீட்டுக்கு அழைத்து ஆபாச பாடம் நடத்திய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  இந்த ஆன்லைன் வகுப்பில் செல்போனில் பேசுகின்ற அழகான மாணவிகளை தனியாக அழைத்து பாடம் தொடர்பாக பேசுவது போல பழகுவதை அறிவியல் ஆசிரியர் ஹபீப் வாடிக்கையாக கொண்டதாகவும், மாணவிகளின் பெற்றோர் அருகில் இல்லாத நேரங்களில் மாணவிகளை தொடர்பு கொள்ளும் அறிவியல் ஆசிரியர், மாணவிகளின் ஆபாசமாக பேசியும், படங்களை அனுப்பியும் செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளதாக கூறங்பபடுகிறது. மேலும், ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கிறேன் என கூறி சில மாணவிகளை வீட்டிற்கு வரவழைத்ததாகவும், , வீட்டிற்கு வரவில்லை என்றால் நான் இந்த ஆண்டு தேர்ச்சி அடைய விட மாட்டேன் என்றும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பான ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  அந்த ஆடியோவில், மாணவியிடம்,  தனது வீட்டுக்கு வந்தால், தான் பல பாடங்களை சொல்லித்தருவேன் என்றும்,  இந்த விசயம் வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் நமக்குள்ளே இருக்கட்டும் உளறிவிடாதே என்று மாணவியிடம் கூறியுள்ளார். மேலும், சில மாணவிகளின் பெயர்களை குறிப்பிட்டு இதற்கு முன் அந்த மாணவிகள் தனது வீட்டிற்கு வந்ததாகவும்  தெரிவித்து உள்ளார்.
பள்ளி மாணவிகளுடன் ஆசிரியர் ஹபீப்  பேசிய ஆபாச ஆடியோ பதிவு தற்போது வாட்சாப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் வைரலானதால் ஆபாச பாடம் எடுத்த அறிவியல் ஆசிரியர் ஹபீப் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். இதையடுத்து, அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி ராகவேந்திரா ரவி காவல் ஆய்வாளர் மோகன் ஆகியோர் நடத்திய விசாரணையில் 20க்கும் மேற்பட்ட 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவிகளிடம் ஹபீப் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆபாச ஆசிரியர் ஹபீப்பை போலீசார் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.