சென்னை: சிறப்பு டிஜிபி ராஜேஸ்தான் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் மூடி முத்திரையிட்ட உறையில் சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்தனர்.

முதல்வர் எடப்பாடியின் தேர்தல் பிரசார பயணத்தின்போது, பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்தச்சென்ற சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், அங்குள்ள பெண் எஸ்பி ஒருவரிடம் பபாலியல் ரீதியாக  தொல்லைப்படுத்தியதாக புகார் எழுந்தது.  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

இதுகுறித்து விசாகா குழு விசாரணை நடத்திவரும் நிலையில், சிபிசிஐடி-யும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. . இந்த வழக்கு மீண்டும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், சிபிசிஐடி போலீஸார், தங்களது முதல்கட்ட விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி, பெண் எஸ்.பி.யை புகார் அளிக்கவிடாமல் தடுத்த எஸ்.பி., மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், டிஜிபி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன் என்று மீண்டும் கேள்வி எழுப்பிய நீதிபதி, விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அன்று இரண்டாம் கட்ட விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.