திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான குழந்தை கள் காப்பகத்தில் பெண் குழந்தைகளிடம் ஆபாச படம் காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ள  சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை அருகே உள்ள  ரமணா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்த மான குழந்தைகள் காப்பம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த  காப்பகத்தில் தங்கியுள்ள 15 பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து  மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, நடைபெற்ற அதிரடி சோதனையில், பெண்குழந்தைகளுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

விசாரணையின்போது,  திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அந்த காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு, காப்பக நிர்வாகி, அடிக்கடி  காப்ப கத்தின் மொட்டை மாடிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று, அவர்களை ஆபாச படங்களை பார்க்கும்படி கட்டாயப்படுத்துவதாகவும், அப்போது பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, அந்த காப்பகத்தில் இருந்த 15 குழந்தைகளையும்  அரசு குழந்தைகள் காப்பகதிற்கு மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

அருணை காப்பகத்தின் உரிமையாளர், பராமரிப்பாளர்  மற்றும் ஊழியர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும்,  காப்பகத்தில் பொறுத்தபட்டிருந்த கண்காணிப்பு கேமிராவின் உபகரணங்களை திருவண்ணா மலை நகர போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. காப்பகத்தில் நிர்வாக போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

ஆன்மிகத்துக்கு பேர்போன சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.