சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி தரப்பில் 3வது முறையாக ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனுமீதான விசாரணை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து,  மனு குறித்து அமலாக்கத்துறை பதில் தர சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜன.8-க்கு ஒத்திவைத்தார்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஜாமின் கோரிக்கை, உச்சநீதிமன்றம் வரை சென்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது  3-வது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.