சென்னை

மிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அவரது ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 16-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 29 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி இன்று உத்தரவிட்டார்.  அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், வழக்கில் ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டது விசாரணையில் தான் தெரியவரும் என்று முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு என்றும், ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டதே சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றமாகக் கருதவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

விரைவில் இந்த மனு நீதிபதி ஆனந்தி வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.