சென்னை: 
கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையில் உள்ள எனது அப்பாவின் சிகிச்சைக்கு உதவுங்கள் என்று மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் மகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர்கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையிலிருந்து வருகிறார்.  இவருக்கு அதிக செலவு கொண்ட சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இந்த சிகிச்சைக்கான கட்டணத்தை அவரது குடும்பத்தினரால் செலுத்த முடியவில்லை.
இந்நிலையில், அவரது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள எனது அப்பாவுக்கு உதவுங்கள்- மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் மகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தொழில்துறையினர் அவருக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனது தந்தையின் சிகிச்சைக்கு உதவுபவர்கள் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்புக்கு
அஜய் கிருஷ்ணா (மகன்)
9840323415