சென்னை

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் தஞ்சை தொகுதி மக்களவை உறுப்பினருமான துளசி ஐயா வாண்டையார் வயது முதிர்வால் மரணம் அடைந்தார்.

மூத்த காங்கிரஸ் தலைவரான துளசி ஐயா வாண்டையார் கடண்டஹ் 1929 ஆம் வருடம் மே மாதம் 11 ஆம் தேதி அன்று பிறந்தவர் ஆவார்.  இவர் தந்து சிறு வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர் ஆவார்.  இவர் கடந்த 1991 ஆம் வருடம் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சாrபில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்

இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிடட  திமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.  அதன் பிறகு நடந்த 1996 ஆம் வருட தேர்தலில் தோல்வியுற்றார். மிகச் சிறந்த கல்வியாளர் என போற்றப்படும் இவர் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பணி புரிந்தவர் ஆவார். வயது மூப்பு காரணமாக இவர் சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் இன்று உயிர் இழந்தார்.

துளசி ஐயா மறைவுக்கு தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் ராம சுகந்தன்,

தஞ்சை மாவட்டத்தின் மிக சிறந்த கல்வியாளரும் முன்னாள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான திரு துளசி வாண்டையார் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இது மிகப்பெரிய இழப்பாகும்.”

என இரங்கல் தெரிவித்துள்ளார்,