ரோடு

மிழக அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக தொண்டர்கள் கைகாட்டுபவர்களுக்குத்தான் வேலைவாய்ப்பு என கூறி உள்ளார்.

கடந்த வாரம் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில்,  அதிமுக உறுபினர் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே இனி அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என பேசினார்.   அது மக்களிடையே மிகவும் சர்ச்சையை உண்டாக்கியது.    அதன் பின் தற்போது அந்த சர்ச்சை ஓய்ந்துள்ளது.     அதற்குள் அடுத்த சர்ச்சையை அதிமுகவின் மற்றொரு அமைச்சர் கிளப்பி உள்ளார்.

நேற்று ஈரோட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு அமைச்சர் செங்கோட்டையன் உரையாற்றி உள்ளார்.   அவர் தனது உரையில், “அதிமுக தொண்டர்கள் கைகாட்டுபவர்களுக்குத் தான் இனி வேலை வாய்ப்பு”  எனக் கூறி உள்ளார்.  அமைச்சர் செங்கோட்டையனின் இந்தப் பேச்சு அடுத்த சர்ச்சையை உருவாக்கி உள்ளது.        இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்