சென்னை

போதை கலாச்சாரத்தில் இளைஞர்கள் பாழாக பாஜக தான் காரணம் எனக் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்/

இன்றுசென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழகக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம்,

”ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் மாயமாகி இருக்கிறது. இது குறித்து உள்துறை அமைச்சகம் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழகத்தில் உள்ள பஜக தலைவர்களும் ஏன் வாய் திறக்கவில்லை ?.குஜராத் கடற்பகுதியில் அதிகமான அளவில் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்ல, .இந்தியாவில் உள்ள இளைஞர்கள் போதைப் பொருளால் பாழடைவதற்கு பாஜக தான் காரணம். தமிழகத்தில் ஒருவர் போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டதை மட்டும் பேசும் பாஜக. இதுகுறித்தும் பேசவேண்டும்”. 

என்று கூறினார்.