சென்னை

சென்னை வானிலை ஆய்வு மைய அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துளது.

நாளுக்கு நாள் தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. மக்கள் பகல் நேரத்தில் மக்கள் வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. ஆயினும்,ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து சற்று வெப்பத்தை தணித்து வருகிறது.

அவ்வகையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.