பெங்களூரு:
செல்பி மோகம் தலைவிரித்தாடுகிறது. ஆபத்தான மலை உச்சி, கடல் பகுதிகளில் செல்பி எடுக்க ஆர்வப்பட்டு உயிரை இழந்தவர்கள் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.
இது இன்னொரு விதம். பிறரது உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் சூழலில் செல்பி எடுப்பது.
ஆம்… காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் கலவரம் தலைவிரித்தாடுகிறது. தமிழர்களின் கடைகள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்படுகின்றன.

a

இப்படி வன்முறை ஏற்பட்டு பதட்டமான சூழல் நிலவும் இடங்களில் செல்பி எடுத்துக்கொள்வது கன்னட இளைஞர்களுக்கு இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது.
அப்படி, தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் வன்முறையாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டபோது, அந்த இடத்தில் செல்பி எடுத்துக்கொள்ளும் இளைஞர்களைத்தான் படத்தில் காண்கிறீர்கள்.