டில்லி

ச்சநீதிமன்றத்தில் கரும்பு விவசாயி சின்னம் கோவி சீமான் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி, கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு அந்த சின்னம், பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இது அவர்கள் போட்டியிட்டு, அதிக வாக்குகள் பெற்ற சின்னம் என்பதால் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

டில்லி உயர்நீதிமன்றம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சீமான் தாக்கல் செய்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நேற்று இந்த உத்தரவுக்கு எதிராக, சீமான் சார்பில் வழக்குரைஞர் நவ்நீத் துக்கர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்துள்ளார்.