சென்னை-

மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து இலங்கை நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு இந்திய கடல் பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியடித்து மிருகத்தனமாக துப்பாக்கிச் சூட்டையும்  நடத்தியுள்ளனர்.

இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த டிட்டோ என்பவரது படகில் சென்ற மீனவர் பிரிஜ்ஜோ  குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

இதேபோல் கிளிண்டன் என்ற மீனவருக்கு குண்டுக்காயம் ஏற்பட்டது. இலங்கை கடற்படை நடத்திய  காட்டு மிராண்டித்தனமான துப்பாக்கிச்சூடு  மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையின் அடாவடி நடவடிக்கையால் தமிழகத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

வன்முறை ஏற்படாமல் தடுக்க,  சென்னையில்  உள்ள இலங்கை துணை தூதரகம், இலங்கை வங்கிகள், சென்னை எழும்பூரில் உள்ள புத்த விஹார் ஆகிய நிறுவனங்களுக்கு போலீஸ் பலத்த பாதுகாப்பு அளித்துள்ளது.