கொழும்பு:

ந்திய (தமிழக) மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக்கொல்லவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட மீனவர் சிட்சோ

இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில், ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது,   அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்கரை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த சிட்சோ(22)  என்ற மீனவர்கொல்லப்பட்டார்.

ஆனால் இதை இலங்கை அரசு மறுத்துள்ளது. இது குறித்து  இலங்கை கடற்பனடை ஊடக தொடர்பாளர் பேசும்போது, “இலங்கை கடற்படை எந்தவித துப்பாக்கிச்சூடும் நடத்தவில்லை. சிறிய படகில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். அவர்கள் குறிப்பிடும்படியான படகுகள் இலங்கை கடற்படையில் இல்லை.  ஆகவே இந்த குற்றச்சாட்டை இலங்கை முழுதுமாக நிராகரிக்கிறது. ஆனாலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.