சென்னை: திமுக கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.

தொகுதிகள் விபரம்:

திருப்பரங்குன்றம்

கந்தர்வக்கோட்டை

திண்டுக்கல்

கோவில்பட்டி

அரூர்

கீழ்வேளூர்

ஆகிய தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், திமுக கூட்டணியில் தொகுதிகளை அடையாளம் காணும் பணி முடிந்துள்ளது. இனி, வேட்பாளர் பட்டியல் வெளியிட வேண்டுமென்பதுதான் பாக்கி.

தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்வதிலும், மார்க்சிஸ்ட் கட்சியுடன் இழுபறி ஏற்பட்டது. தற்போது, தொகுதிகளை அடையாளம் காண்பதிலும் இழுபறியை சந்தித்துள்ளது மார்க்சிஸ்ட்.