இயக்குனர் லிங்குசாமி தெலுங்கில் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். அந்தக் கதை சீமான் பதிவு செய்து வைத்துள்ள பகலவன் படத்தின் கதை என சீமான் தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாருக்கு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் சார்பாக தடை இல்லை என விளக்கமளித்துள்ளது.

2013-ஆம் ஆண்டில் ஏற்கனவே சீமான் – லிங்குசாமி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம் விடப்பட்டுள்ளதால் தற்போதைய புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று சீமானின் புகாரை தள்ளுபடி செய்தனர்.