பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று (ஜூலை 7) காலை 7.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி திலீப் குமார் காலமானார்.

நடிகர் திலீப் குமார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், திரைபிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் ஷாருக் கான், இயக்குனர் கரண் ஜோகர் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சென்று நடிகர் தீலிப் மனைவி சைரா பானுவுக்கு ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் நடிகர் ஷாருக் கான் சைரா பானுவுக்கு ஆறுதல் தெரிவித்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. பலர் அதை பார்த்து வசை பாடியுள்ளனர்.

சன் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக தான் ஆறுதல் சொல்வீர்களா? இது எல்லாம் போலி விளம்பரம் எனவும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரியாதா என்றும் திட்டி வருகின்றனர் . மேலும் இருக்கமான ஆடைகளால் அவரால் தரையில் உட்காரவே முடியவில்லை.