ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் பகுதியின் பாம்பன் அருகே நேற்று சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கியது பதட்டை உண்டாக்கியது

ராமேஸ்வரம் அருகே பாம்பன், தெற்குவாடி, மண்டபம், தோணித்துறை ஆகிய பகுதிகளில் நேற்று காலை வழக்கத்துக்கு மாறாஆக கடல் உள்வாங்கியது,   சுமார் 50 மீட்டர் தூரத்துக்கும் அதிகமாக கடல் உள்வாங்கியதால் கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் மணலில் சிக்கின.

மீனவர்கள் மணலில் சிக்கிய படகுகளை எடுக்க முடியாமல் தவித்தனர்.    தற்போது அடிக்கடி இவ்வாறு கடல் அளவுக்கு மீறி உள்வாங்குவதும்   பின்னர் அளவுக்கு மீறி தண்ணீர் அதிகரிப்பதும் நேர்ந்து வருகிறது.   இதனால் சுற்று வட்டார மக்கள் பீதி அடைந்துள்ளனர்.