சென்னை:
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளிலேயே, விலையில்லா பாடப்புத்தகங்கள் போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளிலேயே விலையில்லா பாட புத்தகங்கள், சீருடை ஆகியவற்றை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 20ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 27ம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.