சென்னை:
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாத இறுதியில் முடிவுற்ற நிலையில், 19 நாள் விடுமுறைக்குப் பின் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

கடந்த கல்வியாண்டில் 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தாமதமாக முடிந்த நிலையில், அவர்களுக்கான கோடை விடுமுறை இம்மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து விடப்பட்டன.

கோடை விடுமுறைக்கு பின், 2022-23-ம் கல்வியாண்டுக்கான 12-ம் வகுப்புக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளன.

இன்று பள்ளி திரும்பும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்றே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.