சென்னை:
னைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று  பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் பெய்த கடும் மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கி இருந்தது.  இதனால் மக்களது இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.   ஆயினும் சென்னையில் பல இடங்களில் மழை நீர் முழுமையாக வடியவில்லை.  மழை நீரை அகற்றும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.   இதையொட்டி தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மழை காரணமாகக் கடந்த சில நாட்களாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், விடுமுறை நாட்களை ஈடு செய்ய வரும் சனிக்கிழமை முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.