ஈரோடு: சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானபின் பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் பகுதி மக்களுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு,  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது: பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயார் நிலையில் உள்ளது. ஆனால் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பின்பு தான் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்.

பள்ளிகளில் வாக்கு சாவடிகள் அமைய உள்ளதால், தேர்தல் அறிவிப்பை பொறுத்தே பொதுத் தேர்வுக்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று கூறினார்.