புதுடெல்லி:
மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க கூடாது என இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

மத்திய நீர்வள ஆணையமும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் நியாயப்படி நடக்கவில்லை எனவும் மத்திய அரசின் ஏஜெண்ட் போல் செயல்படுகிறது எனவும் துரை முருகன் குற்றம்சாட்டினார்.