சிம்ஹா’, ‘லெஜண்ட்’ ஆகிய பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களுக்குப் பிறகு போயபடி சீனு – பாலகிருஷ்ணா இணையும் 3-வது படம் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துள்ளது .

துவாராகா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு, தமன் இசையமைத்து வருகிறார்.

இது இரண்டு நாயகிகளைக் கொண்ட கதை என்பதால், முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு.

தற்போது சயிஷா சைகல் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அதிகாரபூர்வமாகப் படக்குழு அறிவித்துள்ளது.