மதுரை: பொங்கலையொடிடடி, நள்ளிரவு சிறப்புக் காட்சிகள் வெளியிட்ட 34 திரையரங்குகளுக்கு மதுரை கலெக்டர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். சமீபத்தில் சவுக்கு சங்கர் இதுதொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்த நிலையில், முதல்கட்டமாக மதுரை கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில், விதிகளை மீறி  நடிகர் அஜித்குமார் நடித்த ‘துணிவு’, நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்களி சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டது. இந்த படங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டதால், அரசுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டதாக கூறப்பட்டது. இதனால் ஒருவர் அநியாயமாக உயிரிழந்த சம்பவங்களும், சில இடங்களில் ரசிகர்களிடையே மோதலும் ஏற்பட்டது.

இதுதொடர்பாக பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் நேரடியாக குற்றம் சாட்டி, புகார் அளித்திருந்தார். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதாகவும் எச்சரிக்கை செய்திருந்தார்.

இந்த நிலையில், மதுரை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த ‘துணிவு’, நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்களின் சிறப்பு காட்சிகளை நள்ளிரவில் திரையிட்ட  34 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரைப்பட சிறப்பு காட்சிகள், ஆளுநர் மாளிகையில் உளவு விவகாரம்: லஞ்ச ஒழிப்புதுறையில் சவுக்கு சங்கர் பரபரப்பு புகார்…