தேர்தல் நேரத்தில் 50000 ரூபாய்க்கு மேல் பணமாக எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் பல்வேறு நடைமுறை சிக்கல் எழுந்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அவர் கடிதம் எழுதியிருப்பதை அடுத்து பணமாக எடுத்துச் செல்லும் உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுமானப் பணிகள், திருமண செலவு, சுற்றுலா செல்லும் பொதுமக்கள் ஆகியோர் தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரூ. 50000 என்ற உச்ச வரம்பு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் வந்தது முதல் இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காக பணம் எடுத்துச் செல்லும் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.