ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்-க்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 19ம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 19 நாள்களே உள்ள நிலையில், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் தங்களுக்கான சின்னத்தை பெறுவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானை சின்னமும், திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் துரை வைகோ-வுக்கு தீப்பெட்டி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலூர் தொகுதியில் போட்டியிட உள்ள மன்சூர் அலிகானுக்கும் பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.