சென்னை:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டன் இல்லத்துக்கு  தினமும் அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர்  வந்து  ஆர்வத்துடன் பார்வையிடுகிறார்கள்.
இந்த நிலையில், இன்று அங்கு வந்த  தொண்டர்களை சந்தித்து ஆறுதல் கூறினார், ஜெயலலிாதவின் உயிர்த்தோழியான சசிகலா.
விரைவில் அ.தி.மு.கவுக்கு புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில், முதன் முறையாக தொண்டர்களை சசிகலா சந்தித்து முக்கியத்துவம் பெறுகிறது.