சென்னை,

டிடிவி தினகரனின் அறிவிப்புகள் ஏதும் கட்சியை கட்டுப்படுத்தாது என்று எடப்பாடி தலைமையிலான அதிமுக அம்மா அணியின் ஆலோசன கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் நீக்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் டிடிவி தினகரனின் அறிவிப்புகள் ஏதும் கட்சியை கட்டுப்படுத்தாது என்று ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். டிடிவியின் தீவிர ஆதரவாளரான  வடசென்னை மாவட்ட செயலாளர் வெற்றிவேலும் கலந்து கொண்டதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்தக் கூட்டத்தில்  அணிகள் இணைப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.