சென்னை: மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சயின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிமுகம் செய்கிறார்.

தமிழக சட்டபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்து சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இதே கூட்டணியில் இணைந்துள்ள இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள சமக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிமுகம் செய்கிறார்.

அதன்படி, தூத்துக்குடி – எம்.சுந்தர், ராஜபாளையம் – விவேகானந்தர், வாணியம்பாடி – ஞானதாஸ் உள்ளிட்ட வேட்பாளர்களை சரத்குமார் அறிமுகம் செய்கிறார். இந்த தேர்தலில் சரத்குமார், ராதிகா சரத்குமார் போட்டியிடவில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.