சென்னை:
டிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைக்குப்பின் அவர் வீடு திரும்பினார்.
images (1)
இன்று காலை திடீரென சரத்குமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும் தகவல் வெளியானது. அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள், “சரத்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்படவில்லை. நெஞ்சு எரிச்சல்தான்” என்று தெரிவித்தன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரத்குமாருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு இன்று மதியம் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.