சந்தோஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி சர்ச்சைகளை கிளப்பி ஒருவாரத்தில் நிறுத்தப்பட்ட இனம் திரைப்படம் 7 ஆண்டுகள் கழித்து ஓடிடியில் வெளியாக உள்ளது.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரைக் கதைக்களமாக கொண்டு, இந்தியாவில் உருவாக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம் ‘இனம்’. உகந்தா, கரண், சரிதா, கருணா. அனக்கி, ஷியாம் சுந்தர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் திரையிடப்பட்டது.

வெளியாவதற்கு முன்னமே வெளியாவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக உறுதியளித்த படக்குழு, ஒருசில காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டனர்.

அதன்பின்னரும் பலவித நெருக்கடிகளினால் படத்தின் விநியோகஸ்தரான இயக்குநர் லிங்குசாமி, படம் வெளியான ஒருவாரத்திற்குள்ளேயே படத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். அதன்படி மார்ச் 31ஆம் தேதி முதல் தமிழக திரையரங்குகள் அனைத்திலும் இருந்தும் ‘இனம்’ திரைப்படம் நிறுத்தப்பட்டு திரும்பப் பெறப்பட்டது.

இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது ‘இனம்’ திரைப்படம்.