அக்டோபர் 4-ம் தேதி 16 பேருடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில், ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா மற்றும் சனம் ஷெட்டி ஆகிய 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்ட போது பார்வையாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என்றெல்லாம் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டனர்.

இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சனம் ஷெட்டி இன்னும் தனது சொந்த வீட்டுக்கு செல்லவில்லை என்றும் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே யாரும் எதிர்பாராத வகையில் சனம் ஷெட்டி மீண்டும் வைல்ட் கார்ட் போட்டியாளராக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.