பிரபு திலக் வழங்க, ஆனந்த் ஜோசப் ராஜ் தயாரித்துள்ள புதிய படத்தில் சமுத்திரக்கனி கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்துக்கு ‘யாவரும் வல்லவரே’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. அறிமுக இயக்குநர் என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.

4 வெவ்வேறு கதைகளை இணைத்துச் சொல்லும் வித்தியாசமான படமாக இது உருவாகியுள்ளது.

ஒளிப்பதிவாளராக ஜெய்ஸ், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இதில் சமுத்திரக்கனியுடன் யோகி பாபு, ரித்விகா, நான் கடவுள் ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.