திமெரி என். முராரி எழுதிய ‘அரேஞ்மென்ட் ஆப் லவ்’ என்ற நாவலை குரு பிலிம்ஸ் தயாரிப்பில் பிலிப் ஜான் இயக்குகிறார்.

‘அரேஞ்மென்ட் ஆப் லவ்’ என்றே பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் மூலம் ஒரு புதிய உலகம் தனக்காக திறந்திருப்பதாக சமந்தா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் இளைஞன் தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து போன தந்தையை தேடி அலைகிறான்.

அவனுக்கு உதவும் துப்பறியும் பெண்ணாக வரும் சமந்தா இருபால் உறவு கொள்ளும் பெண்ணாக தோன்றுகிறார்.

முதல் முறையாக ஒரு வெளிநாட்டுப் படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கிய இயக்குனருக்கும் சமந்தா நன்றி தெரிவித்துள்ளார்.

2022 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் இயக்குனர் பிலிப் ஜான் இயக்கிய ‘டௌன்டவுன் அபே’ நல்ல வரவேற்ப்பை பெற்றது.