சேலம்:

ருக்காலையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் இன்று பேரணி நடத்தினர்.

சேலத்தில் செயல்பட்டு வரும் இரும்பு உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்க மத்தியஅரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது உருக்காலையை நடத்தி வரும் மத்தியஅரசு நிறுவனமான செயில் (SAIL). உருக்காலை நஷ்டத்தில் இயங்கி வருவதாக காரணம் கூறி, தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி எடுத்து வருகிறது.  இதற்கான அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழகத்தை சேர்ந்த அதிமுக, திமுக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றன. தமிழக சட்டமன்றம், பாராளுமன்றத்திலும் இதுகுறித்து தமிழக எம்பிக்கள் குரல் கொடுத்து வருகிற்னர். மேலும், அதிமுக, திமுக எம்.பி.க்கள் இணைந்து பிரதமரை சந்திக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அரசின் தனியார் மயமாக்கும் முடிவுக்கு உருக்காலையில் வேலைப்பார்க்கும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  அவர்கள் இன்று  குடும்பத்துடன் ஒன்று திரண்ட தொழிலாளர்கள் உருக்காலையின் மூன்று வாயில்களிலும் பேரணியாக சென்று மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.