சேலம்:

சேலம் – சென்னை 8 வழிச்சாலைக்காக நிலம் கையப்படுத்தும் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் ரத்துசெய்துள்ள நிலையில், 8 வழிச்சாலை  மீண்டும் செயல்படுத்தப் படும் என்று மத்திய அமைச்சர்  நிதின்கட்கரி கூறி உள்ளார். இது சேலம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி,  அதிமுக கூட்டணி வேட்பாளார்களுக்கு ஆதரவாக சேலத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது  “ அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மட்டும் தான் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மாற்றும் கூட்டணி. இந்தக்கூட்டணி மற்றும் பிரதமர் மோடியின் காரணமாக தமிழ்நாடு இந்தியாவின் வளர்ச்சி யடைந்த மாநிலங்களில் ஒன்றாக மாறும். எனவே அனைத்து கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும,  சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளதை கூறியவர், இந்த திட்டம் சேலத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்பதால் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்திற்கு கூடுதல் விலை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

எனவே, இந்த திட்டம் குறித்து  விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எட்டியப்பின் குறிப்பிட்ட காலத்திற்குள் 8 வழிச்சாலை திட்டமிட்டப்படி செயல்படுத்தப்படும் என்றும்,தேசிய ஜனநாயக்கூட்டணியின் வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெற செய்தால் உங்களுக்கு தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம்”.

இவ்வாறு அவர் பேசினார்.