சேலம்: 13 கி.மீ தூரத்தை இடைநில்லாமல் ஓடி 1.16 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த  சிறுமி. அவரது சாதனை உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தி சேலத்தில் 13 கிலோ மீட்டர் தூரம் இடைநில்லாமல் ஓட்டம்  நடைபெற்றது. இதில், அந்தபகுதியைச் சேர்ந்த 3ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி, அசத்தலாக ஓடி உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெற்றார்.

சேலம் அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியிலிருந்து தொடங்கிய இந்த சாதனை ஒட்டத்தை  சேலம், மாநகர காவல் துறை உதவி ஆணையர் சத்தியமூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.  சிறுமி அங்கிருந்து ஓடத்தொடங்கி,  அஸ்தம்பட்டி, 5 ரோடு வழியாக சென்று காந்தி விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. சுமார்,   13 கிலோ மீட்டர் தூரம் உள்ள அநத 8 வயது சிறுமி, இடை நில்லாமல், ஒரு மணி நேரம் 16 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்தார்.

சிறுமியின் சாதனையை, நோபுல் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்.   உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. அந்த அத்துடன் அந்த சிறுமிக்கு, கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கப்பட்டது.

உலக அளவில் 8 வயது சிறுமி ஒருவர்  13 கிலோ மீட்டர் தொலைவை, இடையில் நிற்காமல் ஓடி, உலக சாதனையாளர் புத்தகத்தில் சிறுமி ஒருவர் இடம் பிடித்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.