ஹாங்காங்கில் இருந்து விஷ்வ ஹிந்து பரிக்ஷத் சார்பில் பெறப்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை விருதுநகர் மாவட்ட மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் மடத்தில் நடந்தது .

இந்நிகழ்வினை சடகோப ராமானுஜ ஜீயர் தொடங்கி வைத்தார். இவற்றை எவ்வித கட்டணமும் இன்றி பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், இந்த இயந்திரத்தை பயன்படுத்த 9952195502, 9092910878, 9787111774 மற்றும் 9790653631 ஆகிய எண்களை தொடர்புக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களை இந்த நோயிலிருந்து பாதுகாக்க அவர்களை தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு காய்கறிகளையும் மளிகைப்பொருட்களையும் பொதுமக்களுக்கு ஆன்லைன் மூலமாகவும், வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலமாக நேரடியாக விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் கூறி அரசின் இத்தகைய நடவடிக்கை வரவேற்கத்தக்கது என பாராட்டியுள்ளார் .