சென்னை: ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதிய பணப்பலன் ரூ.497.32 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டில்,  அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஜனவரி – ஏப்ரல்’2020 காலக்கட்டத்தில் ஓய்வு பெற்ற 2457 ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பயன்களின் நிலுவைத் தொகையான ரூ.497.32 கோடியினை வழங்கினேன். ஓய்வுக்காலத்தில் உள்ள மகிழ்வோடும், உடல்நலத்தோடும் இனிது வாழ வாழ்த்துகள்! என குறிப்பிட்டுள்ளார்.