சென்னை: மழை வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில்  ரூ.4000 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு கூறி வந்த நிலையில், அதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர்களும், சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து, ரூ.4000 கோடி செலவிடப்படவில்லை என்று என்று பொதுப்பணித்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.  மழைநீர் வடிகால் பணி களின் மதிப்பீடு ரூ 5,166 கோடி என்றவர்,   இதுவரை ரூ.2,191 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே  நிறைவடைந்துள்ளன. மீதித் தொகை இருக்கிறது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்து உள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது ஏற்பட்ட புயல் வெள்ளத்தில் சென்னை தனித்தீவாக காட்சி அளித்தது. மழைநீர் வெளியேற முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டதுடன், பலர் உயரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து எடப்பாடி அரசும், பல்வேறு மழை நீவாரண பணிகளுக்கு பணம் ஒதுக்கினாலும், இதுவரை முழுமையான தீர்வு எட்டப்படவில்லை.

இந்த நிலையில்தான் கடந்த  2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சென்னையில் மட்டும் மழைநீர் தேங்குவதை  முற்றிலுமாக தடுப்போதும் என்று உத்தர வாதம் அளித்ததுடன், மழைநீர் வடிகால்  பணிக்கு ரூ. ரூ.4070 கோடி  ஒதுக்கீடு செய்து, கடந்த இரண்டரை ஆண்டகளாக ப ணிகள் நடெபற்று வந்தன. இந்த பணிகள்  98 சதவிகிதம் பணிகள் முடிவடைந்து விட்டதாக மேயர் பிரியாவும், அமைச்சர் நேருவும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டத்தின்போது கூறியிருந்தனர். மேலும்,   இந்த ஆண்டு பருவமழையின்போது, மழைநீர் தேங்காது என்று கூறப்பட்டது.  ஆனால்,  வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல், மிக்ஜாம் புயல் வரை  பெய்து வந்த கன மழை காரணமாக, சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி, பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மழைநீர் வடிகால் பணிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.4000 கோடி என்னாச்சு என எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.  மேலும், மழைநீர் வடிகால் பணிகளுக்கான ரூ.4,000 கோடி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட மேலும் சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள், திமுக அரசை கடுமையாக சாடியிருந்தனர்.

இதையடுத்து, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு   விளக்கம் அளித்துள்ளார்.  செய்தியாளர்கள்,  அவரிடம் எதிர்க்கட்சிகள் மழைநீர் வடிகால் பணிகளுக்கான ரூ.4,000 கோடி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்துவது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.  அதற்கு பதிலளித்த  கூறியதாவது,

“கொசஸ்தலை ஆறு வடிகால் (AG-ADB Fund), அதன் நீளம் 269 கி.மீ , ஆனால் அதற்கான தொகை ரூ.3,220 கோடி, அதில் 523 கி.மீட்டருக்கு பணிகள் முடிவடைந்துள்ளது. இதற்காக ரூ.3,220 கோடியில் ரூ.1,903 கோடி செலவழித்து பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

கோவளம் வடிகால் (ஜெர்மன் வங்கி நிதி), 360 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.1,714 கோடி மதிப்பீட்டில் 162.72 கி.மீட்டருக்கு பணிகள் முடிவடைந்துள்ளது. இதற்காக செலவான தொகை ரூ.220 கோடியே 24 லட்சம்.

இப்படி எதிர்க்கட்சிகள் கூறும் 4 ஆயிரம் கோடி இதுதான்.

இப்போது நான் கூறிய பட்டியலின்படி, ரூ.5,900 கோடி வருகிறது. இந்த 5,900 கோடி ரூபாய்க்கான பணிகளில் இன்னும் வேலை முடியவில்லை. வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது.

இதுவரை செலவான தொகை என்றால், ரூ.2,000 கோடிதான் செலவாகி உள்ளது. அதில் எஸ்டிஎம்எஃப்-ல் 59.49 கி.மீட்டர் நீளத்துக்கான கால்வாய் பணிகளுக்கான மதிப்பீடு ரூ.232 கோடி. 47.78 கி.மீட்டருக்கான பணிகள் முடிந்துள்ளது. இதற்காக ரூ.68.35 கோடி செலவாகியுள்ளது.

இவ்வாறு இந்த ரூ.5,166 கோடியில் இதுவரை ரூ.2191 கோடிதான் செலவு செய்யப்பட்டுள்ளது. மீதித்தொகை இருக்கிறது. அதற்கான பணிகளும் நடந்து வருகிறது” என்று  கூறினார்.

அண்ணாமலை கேள்வி: அமைச்சர் கே.என்.நேருவின் விளக்கத்துக்குப் பிறகு கேள்வி எழுப்பியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மழைநீர் வடிகால் பணிகள் 98% நிறைவு பெற்றுவிட்டதாகவும், ஒரு மணி நேரத்தில் 20 செ.மீ மழையால் தேங்கும் நீர் வடியும் அளவுக்கு திறன் இருக்கிறது என்றும் கடந்த மாதம் திமுக அமைச்சர் கே.என்.நேரு கூறினார். ஆனால், இன்றோ இதுவரை 42% அளவில்தான் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அவர் கூறியதாக தகவல் வந்துள்ளதே” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, “முதல்வரும், திமுக அமைச்சரும் சுமார் ரூ.4,000 கோடியில் சென்னை மாநகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்திருக்கிறோம். மழை பெய்தால் சொட்டு தண்ணீரும் தேங்காது என வீர வசனம் பேசினார்கள். ஆனால், சென்னை மாநகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆக, ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்தும் ஏன் தண்ணீர் வடியவில்லை?” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரூ.4ஆயிரம் கோடி ஸ்வாஹா? வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை! பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம்..