திருமலை:  திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களை கூட்டத்தை சமாளிக்க, தேவஸ்தான்ம், ஆன்லைன் முலம் முன்கூட்டியே டிக்கெட்டுக்களை வெளியிட்டு, கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்த்து வருகிறது. அதனப்டி,  இந்த மாதத்திற்கான ரூ,300 டிக்கெட் கட்டணம் குறித்த டிக்கெட் இன்று   இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட்டுகள் முன்பதிவு திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வருகிற 12-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரையிலும், பிப்ரவரி மாதத்திலும் திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க ரூ.300 டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. எனவே பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.