சென்னை: தமிழகம் மின்மிகை மாநிலம் அல்ல என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில்  கூறி உள்ளார்.

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதி அமைச்சர் காகிதமில்லா பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். அதில்,  மின்சாரத்துறைக்கு ரூ.19872 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியிருக்கிறது  என்று கூறி வருகின்றனர். அது  உண்மைக்கு மாறானது.  2500 மெகாவாட் மின்சாரம் வெளி மின் சந்தையில் இருந்து வாங்கப்படுகிறது.

அடுத்த 10 ஆண்டுகளில் சொந்த மின்னுற்பத்தி நிலையங்களின் வாயிலாக மாநிலத்தில் 17 ஆயிரத்து 970 மெகாவாட் மொத்த மின் உற்பத்தித் திறன் கூடுதலாக சேர்க்கப்படும் .  அதற்காக மின்சாரத்துறைக்கு ரூ.19872 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.