சென்னை:  அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,555 கோடி ஒதுக்கீடு செய்து, நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கருணாநிதியின் கனவுத்திட்டமான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி கிராம திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வருகிறது. அதற்காக ரூ.1,555 கோடி மதிப்பில்  நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2022 – 23ம் ஆண்டில் 2,544 கிராமங்களில் மேம்பாட்டு திட்டப் பணிகள் நடைபெற உள்ளன.  அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்த தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைப்பு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த குழுவில்,   18 துறைகளைச் சேர்ந்த முதன்மைச் செயலாளர்கள் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, மறைந்த முன்னாள் முத்தலைமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கனவுத்திட்டமான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி கிராம திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வருகிறது. 2023 – 24 ஆம் ஆண்டில் ரூ.1155 கோடி மதிப்பில் 2544 கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.