சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள மாணவிகளுக்கு ரூ.1,000  வழங்கும் திட்டம் செப்டம்பர் 5ந்தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், அந்த விழாவில் கலந்து கொள்ள, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சென்று அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு விடுத்தார்.

ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழகத்தில் மூன்று புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது. அதன்படி 15 மாதிரி பள்ளிகள், 26 சீர்மிகு பள்ளிகள், கல்லூரி மாணவியருக்கு மாதம் ரூ.1,000  வழங்கும் திட்டமான புதுமைப்பெண் திட்ட தொடக்க விழா ஆகிய திட்டங்களின் தொடக்க விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள ஏற்கனே  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில், மரியாதை நிமித்தமாக, அவரை நேரில் சென்று, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  அழைப்பு விடுத்தார். அவர்கள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.