தமிழில் செம்பருத்தி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரோஜா. 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர்.

தற்போது ஆந்திராவில் ஆட்சியில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் ரோஜா.

இந்நிலையில் நகரி தொகுதியில் கபடி போட்டியை தொடங்கி வைக்க சென்ற அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு யாரும் எதிர்பார்க்காத வேளையில் திடீரென கிரவுண்டில் இறங்கி இளைஞர்களுடன் கபடி விளையாடினார் ரோஜா . இதை சற்றும் எதிர்பார்க்காத அப்பகுதி மக்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.

https://www.instagram.com/p/CMKjipIpgLv/