தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அமமுக பொது செயலாளர் அக்கட்சியின் வேட்பாளர்களிடம் விருப்பமனு பெற்று நேர்காணலில் ஈடுபட்டு வருகிறார்.

மொத்தம் 4191 விருப்பமனுக்கள் வந்திருக்கும் நிலையில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேர்காணலில் கலந்து கொண்டனர். அதில் நடிகர் ரஞ்சித், விக்னேஷ் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

கோவை சூலூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்து நேர்காணலில் கலந்துகொண்டிருக்கிறேன். தலைமை எங்கு என்னை நிறுத்துகிறதோ அங்கு நிற்பேன்” என்று தெரிவித்துள்ளார் நடிகர் ரஞ்சித்.

நடிகர் விக்னேஷ் “தாராபுரம் எனது சொந்த ஊர். அந்த பகுதி மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் எனவே தாராபுரம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருக்கிறேன்” என்றார்.