சென்னை,

சொகுசு விடுதியில் தங்கியுள்ள தனது  ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்திக்க புதுச்சேரி செல்கிறார் டிடிவி தினகரன்.

நேற்று முன்தினம் சென்னை ஓட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 பேரும், நேற்று புதுச்சேரிக்கு அழைத்துச்செல்லப்பட்டு தனியார் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அங்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை தொடர்ந்து வேறு மாநில சொகுசு விடுதிக்கு மாற்றலாமா என ஆலோசனை செய்ய டிடிவி தினகரன் புதுச்சேரி செல்வதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைந்ததை தொடர்ந்து, டிடிவி தினகரன் அதரவாளர்கள் அரசுக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

டிடிவி அணியை சேர்ந்த 19 எம்எல்ஏக்களின் இந்த திடீர் கடிதம் காரணமாக தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து தனது ஆதரவு எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவாக மாறி விடக்கூடாது என்று 19 பேரிடமும் குதிரை பேரம் நடத்தப்பட்டு, அவர்களை புதுச்சேரியில் உள்ள தனியாருக்கு சொந்த மான சொகுசு விடுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டு அடைத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் சொகுசு விடுதிக்கு முன்பாக இன்று காலை புதுச்சேரி அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், டிடிவி தினகரன் திடீரென புதுச்சேரி செல்வதாக தவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு அவர் தனது ஆதரவு எம்எல்ஏக்களுன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும், அங்கிருக்கும் எம்எல்ஏக்களை வேறு மாநிலங்களுக்கு மாற்றலாமா என ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.